உலக பத்திரிகை சுதந்திர நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 
stalin

உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ttn

 ஒவ்வொரு ஆண்டும் மே 3-ஆம் நாள் உலக பத்திரிகை சுதந்திர நாளாக அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரிய தகவல்களை அவ்வப்போது அளிப்பதில் பத்திரிகைகளும், ஊடகங்களும் முக்கியப் பங்கினை வகிப்பதால், பத்திரிகைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் உலக பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது.  ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்திடும் வகையில் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் பத்திரிகைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 
 




இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுப்படி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.