சாகித்ய அகாதமி விருது - 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்கு முதலமைச்சர் பாராட்டு!

 
stalin

’நீர் வழிப்படூஉம்’ நாவல் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

tn

எழுத்தாளர் தேவி பாரதி  நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவரின்  நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சூழலில்  ’நீர் வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


 


இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் #தேவிபாரதி அவர்களின் 'நீர்வழிப் படூஉம்' நாவல் #SahityaAkademi விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! என்று குறிப்பிட்டுள்ளார்.