தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

 
stalin

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

corona

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஒமைக்ரான்  பி எஃப் 7 வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.  இதனால் சீனாவில் பாதிப்புகளும் , உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன . கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர்.  அனைத்து மாநில அரசுகளும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் . அனைத்து கொரோனா நோயாளிகளின் மாதிரிகளையும் மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் , தினமும் மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும்  மத்திய அரசு அறிவித்துள்ளது.

india corona

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று பகல் 12 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டுள்ளார் . அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.