எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

 
tn

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

rh
பசிப்பிணி ஒழிப்பு - உணவுப்‌ பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக்‌ கடந்த முக்கால்‌ நூற்றாண்டு காலம்‌ அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண்‌ அறிவியலாளர் எம்‌.எஸ்‌ சுவாமிநாதன்‌ நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 98. சமூகத்‌ தலைமைக்கான ராமன்‌ மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன்‌, பத்ம விபூசன்‌ உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை  சுவாமிநாதன்‌ பெற்றுள்ளார்‌.  

tn

இந்நிலையில் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என். நேரு ,முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். சுவாமிநாதன் கெளரவிக்கும்‌ விதமாக  காவல்துறை மரியாதையுடன்‌ இறுதி அஞ்சலி செலுத்தப்படும்‌ என்று முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.