பீகார் ரயில் விபத்து - நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் நிதிஷ் குமார்
பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேரி குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்போர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு வடகிழக்கு அதிவிரைவு ரயில் 21 பெட்டிகள் தடம் புரண்டன. டெல்லி ஆனந்த விகாரில் இருந்து அசாம் காமாக்யா நோக்கி சென்ற ரயில் இரவு 9:35 மணி அளவில் ரகுநாத்போர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் பார்வையிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Bihar CM Nitish Kumar announces an ex-gratia of Rs 4 Lakh each to families of the people who died after 21 coaches of the North East Express train were derailed in Buxar last night: Bihar CMO pic.twitter.com/w60oPArmS2
— ANI (@ANI) October 12, 2023
இந்த நிலையில், பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேரி குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பீகார் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், டெல்லியின் ஆனந்த் விஹார் நிலையத்திலிருந்து குவஹாத்தியின் காமாக்யா நிலையத்திற்குச் செல்லும் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் பக்சர் மாவட்டத்தில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் 04 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிப்பதாக முதல்வர் ஸ்ரீ நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்தால் முதல்வர் மனம் உடைந்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.