மழைநீர் வடிகால் பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

 
tn

கொளத்தூர் பகுதியில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பதோடு மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு மேற்கொள்கிறார்.

stalin

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் . பாடி, திரு.வி.க.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு  மேற்கொள்கிறார்.

cm stalin

பெரம்பூரில் தணிக்காச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.