நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

 
நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சியின் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையின் சார்பில் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 227 நபர்களுக்கு,  நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் 84 நபர்களுக்கு, 

பேரூராட்சி இயக்குனரகத்தில் 10 நபர்களுக்கு,  தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் வாரியத்தில் 130 நபர்களுக்கு என மொத்தம் 451 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை  அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக 10 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,  தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.