"மக்களின் மனம்நிறைந்த பாராட்டைப் பெற்றுள்ளது மக்களுடன் முதல்வர் திட்டம்" - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டு, மக்களின் மனம்நிறைந்த பாராட்டைப் பெற்றுள்ளது #மக்களுடன்_முதல்வர் திட்டம்!
ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்த எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டியதால் பல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் மலர்ந்த முகங்களைச் செய்திகளில் பார்த்தேன். ஊடகங்களின் பாராட்டைப் படித்து நிறைவாக உணர்ந்தேன். இதற்காக உழைத்த அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவருக்கும்
வாழ்த்துகளும், நன்றியும்!
தீர்வைத் தேடி மக்கள் அலைவதைத் திருத்தி, தீர்வுகள் மக்களைத் தேடிச் செல்லும் காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது நமது #DravidianModel அரசு.
30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டு, மக்களின் மனம்நிறைந்த பாராட்டைப் பெற்றுள்ளது #மக்களுடன்_முதல்வர் திட்டம்!
— M.K.Stalin (@mkstalin) February 16, 2024
ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்த எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டியதால் பல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் மலர்ந்த முகங்களைச்… pic.twitter.com/2e1Cvy701C
30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டு, மக்களின் மனம்நிறைந்த பாராட்டைப் பெற்றுள்ளது #மக்களுடன்_முதல்வர் திட்டம்!
— M.K.Stalin (@mkstalin) February 16, 2024
ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்த எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டியதால் பல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் மலர்ந்த முகங்களைச்… pic.twitter.com/2e1Cvy701C
அரசின் சேவைகளை மக்கள் விரைந்து பெறுவதிலுள்ள சுணக்கங்களைத் தொடர்ந்து கள ஆய்வுகள் மூலமாக நான் கண்டறிவேன். அவற்றைக் களைந்து, நடைமுறைகளை எளிதாக்க #MakkaludanMudhalvar போல இன்னும் பல திட்டங்களைத் தீட்டுவேன்!என்று குறிப்பிட்டுள்ளார்.