பெரியார் குறித்த சர்ச்சை! UPSC கேள்வி நகலை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம்!

 
protest protest

தந்தை பெரியார் பெயருக்கு பின்னர் சாதியை இணைத்த ஒன்றிய அரசின் UPSC தேர்வாணையத்தை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


நாடு முழுவதும் யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அதில் ஒரு கேள்வி பதிலில் பெரியார் பெயர் சாதி பெயருடன் இடம்பெற்று இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்? என்ற கேள்வியில் பெரியார் பெயருடன் சாதி பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது.  அந்த கேள்விக்கான பதிலில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப்பெயருடன் கேள்வி இடம்பெற்றிருந்தது. இதேபோல் மசோதாவை ஆளுநர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில், தந்தை பெரியார் பெயருக்கு பின்னர் சாதியை இணைத்த ஒன்றிய அரசின் UPSC தேர்வாணையத்தை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் UPSC கேள்வி நகலை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். UPSC முதல்நிலைத் தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னர் சாதியை இணைத்து கேள்விக்கான பதில் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.