அரியரால் மன உளைச்சல்- கல்லூரி மாணவன் தற்கொலை

 
suicide suicide

மறைமலைநகர் அருகே அரியர் வைத்த காரணத்தினால் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

suicide

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் நிஜின் வயது (21). இவர் பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் அவர் கல்லூரி பாடத்திட்டத்தில் ஆறு பாடத்தில் அரியர் வைத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்காக அவரது வீட்டில் தந்தையும் மகனை திட்டியதாக  கூறப்படுகிறது. 

இதனால் மன உளைச்சலில் இருந்த நிஜின், அவரது வீட்டில் உள்ள அவரது அறையில் உள்ளே சென்று மின் விசிறியில் தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்பு சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார், பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.