"சிறு வணிகர்களுக்கு சமாதான திட்டம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
tn

சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

stalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் பேசியபோது,  சிறு வணிகர்களுக்கு சமாதான திட்டத்தை அறிவித்தார்.  வணிகர்கள் - வணிகவரித்துறை இடையேயான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 50,000க்கு கீழ் வரி, வட்டி, அபராத தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

MK Stalin

அத்துடன் 10 லட்சம் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20% வரியை செலுத்தினால் போதும். வணிகர்களால் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி வட்டி அபராதம் நிலுவையில் உள்ளது.  பழைய நிலுவை தொகையை வசூலிக்க சமாதான திட்டத்தை கொண்டு வருகிறோம். வணிகர்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதில் நான்கு வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.  தமிழ்நாடு வரலாற்றில் வணிகர்களுக்கு இத்தகைய சலுகை வழங்குவது இதுவே முதல்முறை.  அக்டோபர் 16ஆம் தேதி நடைமுறைக்கு வரும் இத்திட்டம் பிப்ரவரி 15 2024 வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.