"பீகாரில் அண்ணன் தம்பி மாதிரி கையை பிடிச்சிட்டு நிக்குறாங்க.. இதை யாராவது உடைக்க முடியுமா?"- செல்வப்பெருந்தகை
பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது ஆர்எஸ்எஸ் தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களுடைய 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் ராணுவ படை வீரர்கள் பிரிவு முன்னாள் தலைவர் கேப்டன் பிரவீன் தாவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, “இன்று தலைவர் மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து கொண்டாடி வருகிறோம் , புதுடெல்லியிருந்து கேப்டன் டார்வின் அவர்கள் வந்துள்ளார் அவரைப் பற்றிய வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை உரையாற்ற வந்துள்ளார் , மற்றும் முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்களின் 5 ஆம் நினைவு நாள் தொடர்ந்து அவருக்கு மலர்வளையம் செலுத்தி உள்ளோம், தோழர் நல்ல கண்ணு அவர்கள் நலம் பெறுவதற்கு காங்கிரஸ் பெயர் இயக்கம் சார்பில் கூட்டு பிராத்தனை செய்ய உள்ளோம் , தமிழ்நாட்டிற்கு நல்லகண்ணு தோழர் தேவை தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனைகள் அவரை மீண்டும் கொண்டுவரும், தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அவரை மீண்டும் வந்து குரலற்றவர்களின் குரலாக வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சமூக மாற்றத்திற்காக செயல்படும் இயக்கங்கள் தொடர்பாக யாரும் விமர்சனங்கள் வைக்க மாட்டார்கள் , கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , திமுக , காங்கிரஸ் இயக்கங்கள் சமூக மாற்ற கட்சிகள் ஆர்எஸ்எஸ் எப்படி சமூக மாற்றத்திற்கான கட்சி என்று கூற முடியும் ? ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள் மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றப்பத்திரிக்கையை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும் ராணுவத்தில் இருக்கும் கேப்டனை மூளை சலவை செய்து ஒரு வெடிகுண்டு குற்றத்தில் ஈடுபட செய்தவர்கள் ஆர்எஸ்எஸ். மகாத்மா காந்தி அடிகளை ஆர்எஸ்எஸ் சுட்டுக்கொன்றது , விஞ்ஞானத்திற்கு எதிராக ஆர்எஸ்எஸ் பேசி வருகிறது. புஷ்பராக விமானத்தை ரைட்ஸ் சகோதரர்கள் விமானம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக வானத்தில் ஏவப்பட்டது கூறுகிறார்கள். கோமியம் குடியுங்கள் , அனுமான் தான் விண்வெளியில் சென்ற முதல் நபர் என்று கூறுகிறார்கள் இவைதான் சமூக மாற்றங்களா? பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் இந்த உலகத்தில் இருப்பது என்னவென்றால் அது ஆர்எஸ்எஸ் இயக்கம் தான்
வாக்காளர்கள் அளிக்கும் வாக்குகள் அந்த கட்சிகளுக்கு சென்றால் மட்டுமே தான் ஜெயிக்க முடியும், அப்படி இல்லாத நிலையில் வாக்குகள் திருடப்படுவதால் அமைச்சர் அவர்கள் தைரியமாக 50 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருக்கும் என்று கூறுகிறார் , மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அந்த வாக்குகள் கட்சிகளுக்கு சென்றடையாது மக்களின் வாக்குகளை அவர்கள் அளித்துக் கொள்வதால் நாங்கள் தான் ஜெயிப்போம் என கூறுகிறார்கள். மக்கள் இதனை வேடிக்கை பார்க்க மாட்டார்கள் பீகாரில் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்று வருகிறது , நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் , காங்கிரஸ் சார்பில் 7 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்கு திருட்டு தொடர்பாக விளக்க மாநாடு நடத்த உள்ளோம் , அகில இந்திய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் , இந்த மாநாட்டில் வாக்கு திருட்டு எப்படி நடைபெற்றது என்று விளக்க உள்ளோம்.பாஜகவினர் எந்த மாநிலங்களில் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளதோ அந்த மாநிலங்களில் வாக்கு திருட்டு நடத்துகின்றனர் , தெலுங்கான , தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மக்கள் புரட்சி வெடிக்கும் அந்த காரணமாக வாக்குத்திருட்டு இங்கு நடத்துவது கடினம்.இந்திய வெளியுறவு கொள்கைகள் தோல்வியுற்று பல்வேறு வருடங்கள் ஆகியது அதன் காரணமாக தான் சீனர்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்கின்றனர் , நம்முடைய ராணுவ வீரர்கள் கல்லால் அடித்தே கொலை செய்தனர் , அண்டை நாடுகள் நட்பு நாடுகளாக இந்திரா காந்தி அம்மையார் ஆட்சி காலத்தில் கூனிக்குறுகி இருந்தார்கள் , அண்டை நாடுகள் பயந்து இருந்தனர்.ஆனால் தற்போது அண்டை நாடுகள் அனைவரும் பகை நாடுகளாக மாறிவிட்டனர்” என்றார்.
தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நேற்றைய தினம் பீகாரில் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் தலைவர் ராகுல் காந்தியும் அண்ணனும் தம்பியும் போல் செயல்பட்டனர் இவர்களை உடைக்க வாய்ப்புகள் இல்லை என்றார்.


