குடிநீர் விநியோகம் தடைபடுமா? - முதலமைச்சர் ஆலோசனை!

 
stalin

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

water
தமிழ்நாட்டில் கோடை காலம் வந்தால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் குடிப்பதற்கும்,  அன்றாட பயன்பாட்டுக்கும் கூட நீர் இல்லாமல் சூழல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். இதன் காரணமாக மழைக்காலங்களில் ஏரிகள்,  குளங்களில் தூர்  எடுக்கப்பட்டு நீரை சேமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.  தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு விநியோகிக்கக்கூடிய குடிநீரை தடை இல்லாமல் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

stalin

இந்நிலையில்  கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.  முதல்வருடான ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.