காது வலிக்கு தவறான மருந்து.. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவருக்கு உத்தரவு!

 
நீதிமன்றம்

தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஜோசப் என்பவர், 2015ஆம் ஆண்டு காது வலிக்காக சீனிவாசன் என்ற மருத்துவரிடம் பரிசோதனை செய்து மருந்து வாங்கி உள்ளார். அதனை உட்கொண்ட பின்னர் காது வலி அதிகரித்ததால், ஜோசப் வேறு மருத்துவரிடம் மருந்து வாங்கி எடுத்துக்கொண்ட பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.

Bombay HC stays state govt rule which made consumer court toothless

இதனையடுத்து தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு வழங்கிடக் கோரி மருத்துவர் சீனிவாசனுக்கு எதிராக தேனி மாவட்ட நுகர்வோர் நீதி்மன்றத்தில் ஜோசப் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பின் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தின் கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஜோசப்பின் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதால் அவருக்கு மருத்துவர் சீனிவாசன் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டார்.