அண்ணாநகர் முதல் கோயம்பேடு வரை ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம்

 
தேமுதிக

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணிக்கு சென்னை கோம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலயே அடக்கம் செய்யப்படவுள்ளது.

Image

மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து விஜயகாந்தின் உடல், கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று முழுவதும் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்படுகிறது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தில் அதிகளவில் வாகனங்கள் இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஆகவே பாடி மேம்பாலம், திருவீதி அம்மன் சர்வீஸ் சாலை, சாந்தி காலனி 13-வது மெயின்ரோடு வழியே வாகன ஓட்டிகள் செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.கூட்டம் அதிகம் இருப்பதால் அண்ணாநகர் முதல் கோயம்பேடு வரை ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.