ஒடிசா ரயில் விபத்து - சசிகலா இரங்கல்!

 
sasikala


ஒடிசா ரயில் விபத்து  மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்னை-கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் இதுவரை 238 நபர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வருவது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

tn

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மேலும் இரண்டு ரயில்கள் இந்த கோரவிபத்தில் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இதில் 900க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வருவது மேலும் அதிர்ச்சியளிக்கின்றன. 

இது போன்ற ஒரு பேரழிவை யாராலும் தாங்கிக்கொள்ளமுடியாது. இந்த கோர விபத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை உடனே மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.



இது போன்ற விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை உரிய விசாரணை மேற்கொண்டு கண்டறிய வேண்டும் என மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.