சர்ச்சை பேச்சு - சீமானை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

 
seeman seeman

அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துளது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும், வழக்கிலிருந்து விடுவிக்கவும் வேண்டும் என சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், சீமானின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
 

அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரானால் தான் சீமானுக்கு நிதானம் வரும் என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.