டிடிஎஃப் வாசனின் காரை ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு
செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் ஜாமின் யூடியூபர், பைக் ரேஸருமான டிடிஎப் வாசன் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து மதுரை அண்ணா நகர் போலிசாரால் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேலும் டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் காரை ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎஃப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. "காரை ஒப்படைத்தால் டிடிஎஃப் வாசன் மீண்டும் அதே குற்றத்தை செய்ய வாய்ப்புள்ளது” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிடிஎஃப் வாசனின் தாயார் சுஜாதா தொடர்ந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


