6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநருக்கு விருப்பப்படி பணியிட மாற்றம்!

 
driver

கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பணி மாறுதல் கோரி 6 மாத குழந்தையுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் கண்ணனை, அவர் விருப்பப்படி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., கோவை மண்டலம், கங்கம்-1 கிளையில் பணிபுரியும் திரு.P.கண்ணன், ப.எண்:C29307, ஓட்டுநர் என்பவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை மண்டலத்திற்கு நிரந்தர ஒருவழி மாறுதல் கோரியதற்கு, பார்வை-1ன் மூலம் இசைவு கோரப்பட்டது.பார்வை-2ல், மேற்படி பணியாளரை நிரந்தர ஒருவழி மாறுதல் அடிப்படையில் திண்டுக்கல் மண்டல தேனி கிளைக்கு ஈர்த்துக் கொள்ள தெரிவிக்கப்பட்ட இசைவினைத் தொடர்ந்து, பணியாளரை நிரந்தர ஒருவழி மாறுதல் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், திண்டுக்கல் மண்டலத்திற்கு, வழக்கமான சட்டதிட்டங்களுக்குட்பட்டு மாறுதல் செய்து உத்தரவிடப்படுகிறது.

transfer

பொது மேலாளர், தஅபோக (கோவை) லிட்., கோவை மண்டலம் அவர்கள் மேற்படி பணியாளரை, வழக்கமான சட்டதிட்டங்களுக்குட்பட்டு இக்கழகத்திலிருந்து விடுவித்து, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், மதுரை அவர்கள் முன்பு ஆஜராக அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.