கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டு அனுப்பி வைப்பு!
கோவை அவினாசி மேம்பாலம் அருகே கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டு அனுப்பி வைப்புக்கப்பட்டுள்ளது.
கோவை அவினாசி மேம்பாலம் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது. கொச்சியில் இருந்து கோவைக்கு கேஸ் ஏற்றிவந்த நிலையில் டேங்கர் லாரி அதிகாலை விபத்தில் சிக்கியது. கவிழ்ந்து கிடக்கும் டேங்கர் லாரியில் கேஸ் கசிவால் பரபரப்பு ஏற்பட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக எரிவாயு கசிவை தடுக்கும் பணி நடைபெற்றது. டேங்கரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி நடைபெற்றது. டேங்கரில் ஏற்பட்ட கேஸ் கசிவை, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.கிரேன் மூலம் டேங்கர் தூக்கி நிறுத்த முயற்சித்தனர்.
இந்த நிலையில், கோவை அவினாசி மேம்பாலம் அருகே கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டு அனுப்பி வைப்புக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கேஸ் டேங்கர் லாரி பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் குடோனுக்கு டேங்கர் லாரி பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது.


