ராட்சத கிரேன் இயந்திரம் சரிந்து விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!!

 
tn

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் இடிந்து விழுந்ததில் 17பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

 இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  தேசிய பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tn

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகவுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா தானேவில் கிரேன் விழுந்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.