புதிய சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
குமரி மாவட்டம் அருவிக்கரையில் தடைசெய்யப்பட்ட பாறைக்கூட்டத்தில் நண்பர்களுடன் குளித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரையில் தடை செய்யப்பட்ட பாறைக் கூட்டத்தில் நண்பர்களுடன் குளித்த புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று முன்தினம் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய நண்பர்களுடன் ஆரல்வாய்மொழி வழியாக அருவிக்கரை வந்து குளித்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அண்மையில் பெய்த மழையால் பரளியாற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பாறைக்கூட்டம் பகுதியில் குளிக்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.


