கிரைம் செய்திகள் : மனைவியை கொன்று WhatsApp Status வைத்த கணவர்..!

 
1 1

திருநெல்வேலி மாவட்டம், தருவை பகுதியைச் சேர்ந்த சிவன்பாண்டியின் மகன் பாலமுருகன் (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா (வயது 28) என்பவருடன் இவருக்குத் திருமணமாகி, இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். எனினும், கடந்த சில ஆண்டுகளாகவே பாலமுருகனுக்கும் ஸ்ரீபிரியாவிற்கும் இடையே மனச் சஞ்சலமும் கருத்து வேறுபாடுகளும் நீடித்து வந்தன.

இந்த நிலையில், 30 வயதான ஸ்ரீபிரியா அவரது கணவர் பாலமுருகனை விட்டு கோவையில் தங்கி வேலை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார். இந்த சூழலில், காந்திபுரம் இரண்டாவது வீதி பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்த நிலையில், பாலமுருகனின் உறவினர் இசக்கி என்பவருடன் பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஸ்ரீபிரியாவும், இசக்கியும் ஒன்றாக சேர்ந்து வெளியில் செல்வது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பாலமுருகனின் உறவினர் இசக்கி ராஜா whatsappல் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பாலமுருகன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாலமுருகன் கோவை வந்த நிலையில், மனைவி தங்கி இருக்கும் தனியார் மகளிர் விடுதிக்கு வந்து உள்ளார். அப்போது மனைவி பிரியாவை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.ஆனால் ஸ்ரீ பிரியா வர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து பாலமுருகன் மறைத்து வைத்து இருந்த அருவாளை கொண்டு மகளிர் விடுதி வளாகத்திலேயே சரமாரியாக மனைவியை பிரியாவை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ பிரியா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

மேலும், தனியார் மகளிர் தங்கும் விடுதி வளாகத்திலேயே மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு , காவல் துறையினர் வரும் வரை அங்கேயே கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்த பாலமுருகன், அதை புகைபடமாகவும் எடுத்து துரோகத்தின் சம்பளம் மரணம்என ஸ்டேடஸ் வைத்து உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த கோவை ரத்தினபுரி காவல்துறையினர் சடலமாக கிடந்த ஸ்ரீ பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து ரத்தினபுரி போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.