"முதலமைச்சரின் பயணத்தை விமர்சிப்பதா?" அமைச்சர் பதிலடி

 
tn

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன்  பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி 169 வார்டில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 28 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா சாலை பூங்கா பணிகளை துவக்கி வைக்க அடிக்கல் நாட்டினர். இதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னை சைதாப்பேட்டை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் அமைந்திருக்கும் காலி இடத்தில் மாநகராட்சி சார்பில் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா தொடங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் வேளச்சேரி சின்னமலை இணைப்பு சாலையில் 14 லட்சம் மதிப்பில் ஒரு புதிய ரேஷன் கடை தொடங்கப்பட உள்ளது.  மக்கள் ஒரே கடையில் நீண்ட நேரம் காத்திருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு  தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

tn

இதையடுத்து சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,  இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம் . தொடர்ந்து இது குறித்து பேசினால் நன்றாக இருக்கிறது.  ஆளுநரும் தெரியாமல் பேசி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று கூறினார். அத்துடன்  மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு மத்திய அரசு 15 சதவீதம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியானதும்,  தொடர்ந்து அடுத்த நாளில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்படும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எந்தவித பிரச்சினையும் இருக்காது.  விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளோம்.

tn

தர்மபுரி, திருச்சி, ஸ்டான்லி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் மருத்துவ சேர்க்கைக்கான எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்புகிறோம் . முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் வெளியிட்ட அறிக்கை குறித்த  கேள்விக்கு பதிலளித்த அவர்,  எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கை குறித்து எந்த கவலையும் இல்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள், யோசிக்க தெரியாதவர்கள் கூறுகின்றனர்.  முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு தகுதி இல்லை. இதுவே ஆளுநருக்கு பொருந்தும் என்றார்.