“என்றுமே பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என விஜய் கூறிவிட்டார்”- சி.டி.நிர்மல்குமார்

 
சிடி நிர்மல் குமார் சிடி நிர்மல் குமார்

பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் டிவிகேயில் இணைந்தனர்; விஜய் முக்கிய பதவிகளை  தருகிறார் - தி இந்து

சென்னை திருவான்மியூரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது.இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த்,துணை பொது செயலாளர் சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்ட 50 மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை பொது செயலாளர் சி.டி.நிர்மல்குமார், “எங்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை தலைவர் விஜய் சொன்ன வார்த்தை‌. தலைவருடைய அறிவுறுத்தலின் பேரில் தான் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். எங்கள் தலைவர் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் எங்கள் தலைவர் தெளிவாக சொல்லிவிட்டார். என்றுமே பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று தெளிவாக தெரிவித்துவிட்டார் இதில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவை இல்லை” என்றார்.

முன்னதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டணி குறித்து தவெக தலைவர் விஜயிடம்  இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்று கூறி இருந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.