முதல்வர் பற்றி அவதூறு - சி.வி.சண்முகம் ஆஜர்
முதல்வர் குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.
கடந்த மார்ச் 7-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக அவர் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக சி.வி சண்முகம், அக்டோபர் 9ம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் மார்ச் 7ல் நடந்த கூட்டத்தில் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.