முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜர்!

 
cv shanmugam

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். 

கடந்த ஆண்டு சூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திமுக அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி 
அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த முறை ஆஜராகாத நிலையில் இன்று ஆஜரானார்.