விவசாயிகளே தவறவிடாதீர்கள்... காப்பீடு செய்ய இது தான் கடைசி நாள்!

 
பயிர் காப்பீடு திட்டம்

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. அதேபோல தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே விவசாயிகள் இயற்கை பேரழிவுகளிலிருந்து தங்களின் பயிர்களை பாதுகாக்க பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று மத்திய விவசாயத் துறை அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளுக்கும் இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளது.

ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: தமிழக அரசு  அறிவிப்பு | Crop Insurance Scheme with an allocation of Rs. 2,327 crore:  Government of Tamil Nadu Announcement ...

அதன்படி தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கும் வகையில், தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2021- 2022 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான நிதியினையும் வழங்கி உள்ளது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சம்பா/ தாளடி/ பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை முழுவீச்சில் காப்பீடு செய்து வருகின்றனர். இதுவரை 5.65 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

வரும் 7 ஆம் தேதி முதல் பயிர் நிவாரணம்! பயிர் சேத பட்டியல் சரிபார்ப்பு!

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூ, திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15, 2021 கடைசி நாளாகும். 

நெல்லை அருகே கோடை நெல் சாகுபடி பணி தீவிரம்- குளத்து தண்ணீரை நம்பி  களமிறங்கிய விவசாயிகள் | நெல்லை அருகே கோடை நெல் சாகுபடி பணி தீவிரம் ...

கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பியிரை காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 15, 2021 கடைசி நாளாகும். தற்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையினால், நெற்பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம். 

பயிர்கள் சேதம்

விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், விஏஓ வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கி பாஸ்புக்கின் முதல் பக்க ஜெராக்ஸ் ஆதார் அட்டை ஜெராக்ஸ், பயிர் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீத தொகையினை விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். இதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாணமை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், வங்கிகளை அணுகலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.