மதுபோதையால் பலியான உயிர்! ஒரே மாதத்தில் முடிந்த திருமண உறவு

 
Death

செங்கல்பட்டு அருகே திருமணமான புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு உயிரை காவு வாங்கி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வெண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் தனியார் கம்பெனியின் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த இவரது மாமா பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வீட்டில் பிரச்சனை வருவது வழக்கம். இந்த நிலையில கடந்த அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் அவரது மனைவியுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென பாக்கெட்டில் இருந்த மது பாட்டில் கீழே விழுந்து விட்டது. மேலும் 2 மணி நேரம் கழித்து மது பாட்டில் என போதையில் மணிகண்டன் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வைத்திருந்த தர்பன் என்கிற வேதியல் திரவத்தை தவறுதலாக குடித்துள்ளார். உடனே மயங்கிவிழ, மனைவியின் அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர், மணிகண்டனை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.