24,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு - அமைச்சர் துரைமுருகன்

 
duraimurugan

தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

cauvery river

இந்நிலையில் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரியில் விநாடிக்கு 24,000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட, காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும்;45 டிஎம்சி நிலுவை தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும்

duraimurugan

காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு சார்பில் உரிய நீர் வழங்க வலியுறுத்தப்படும்;பருவமழை பொய்த்து போனால் காவிரியில் நீர்வரத்து குறைவது இயல்பு; தண்ணீர் குறைந்த போதும் தமிழ்நாட்டின் பங்கீடு குறித்து மேலாண்மை ஆணையம் முடிவு செய்யும்" என்றார்.