மதுரை ரயில் விபத்து - உயிர் தப்பியவர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முடிவு!

 
flights

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் தப்பியவர்களை விமானம் மூலம் உத்தரபிரதேசம் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.  தீ விபத்து தொடர்பாக தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி இன்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தவுள்ளார்.  

tn

இந்த நிலையில், தீ விபத்தில் உயிர் தப்பியவர்களை விமானம் மூலம் உத்தரபிரதேசம் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 9 பேரின் உடல்களை அவர்களது சொந்து ஊருக்கு கொண்டு செல்வதற்காக சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீ விபத்தில் உயிர் தப்பியவர்களை விமானம் மூலம் உத்தரபிரதேசம் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.