"ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை" - டிடிவி தினகரன் பேச்சு!!

 
tn

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் ஒன்றாக இணைந்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

tn

தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டிடிவி தினகரன் , "அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள்; இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை... டெண்டர் படைதான் அங்கே இருக்கிறது. விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது; ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள்; அச்சாணி முறிந்து போனவர்கள்; டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள்!" அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்துபாடி, சிந்துபாத் வேலை பார்ப்பவர்கள்; அச்சாணியை பற்றி பேசுகிறார்கள். ஒரு இயக்கத்தின் உண்மையான அச்சாணி விசுவாசமிக்க தொண்டர்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.

ttv dhinakaran

கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளைக்கு யார் என்று உங்களுக்கு தெரியும்;தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்து 90 நாட்களுக்குள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் அதனை மறந்துவிட்டார். ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை . ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர்" என்றார் .