ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

 
g

 ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.

 தமிழகம் முழுவதும் வரும் இருபதாம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்திருக்கிறது.

m

 தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகளின் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.   ஒரு சில தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று இருக்கும் மூன்று ஆணவக் கொலைகள் தமிழகத்தை அதிர வைத்திருக்கிறது .

ஆணவக் கொலைகளை தடுக்கும் சிறப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கருதும் தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி தமிழக அரசு சாதி ஆணவக் கொலைகளை தடுத்திட உடனடியாக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.