தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

 
dengue

தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

dengue

கேரளாவில் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுத்து, அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்  என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

dengue

மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றுடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை  கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.