தேவர் ஜெயந்தி - பசும்பொன்னில் டிடிவி தினகரன் மரியாதை!!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர போராட்ட வீரரும், சமுதாய சமநிலைக்காகவும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமைகளைக்களைவதற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, தேசியமும், தெய்வீகமும் தனது இரண்டு கண்களாகப் போற்றிய மாபெரும் தலைவர் 'தென்னாட்டு போஸ்' பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30.10.2023 திங்கள் கிழமை அன்று நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி தேவர் திருமகனாரின் நினைவாலயம் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று அன்றைய தினம் காலை 10 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு:
— AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM (@ammkofficial) October 20, 2023
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா!
அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! pic.twitter.com/9ggLxK9nb1
தலைமைக் கழக அறிவிப்பு:
— AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM (@ammkofficial) October 20, 2023
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா!
அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! pic.twitter.com/9ggLxK9nb1
இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வட்ட/வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.