சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி..

 
சதுரகிரி மலைக்கோயில்

சதுரகிரி  சுந்தரமகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமு  அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அந்தவகையில், பிரதோஷம் மற்றும் ஆவணி மாத பௌவுர்ணமியை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.  நான்கு நாட்களும்  காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனி மாத பௌர்ணமி பூஜை – சதுரகிரி மலைக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!

மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும்,  சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அத்துடன் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர்  மேற்கொண்டு வருகின்றனர்.