" கண்ணியம் குறையாமல் செயல்படுங்கள்" - தமிழக போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம்!

 
sylendra babu

காவல்துறையின் கண்ணியம் குறையாமல் செயல்படுங்கள் என்று போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்கள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக காவல்துறையினர் கொரோனா கால பணிகளில் ஈடுபட்டனர். இதில் 100ற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல் கொரோனா காலக்கட்டத்திலும் ரவுடிகள்  ஆங்காங்கே தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.  

police

இந்நிலையில் காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு எழுதியுள்ள கடிதத்தில், " தமிழகம் முழுவதும் 2020ம் ஆண்டில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் 139 காவல்துறையினரை நாம் இழந்துள்ளோம்.  தமிழக காவல்துறையினர்  கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் செயல்படக்கூடாது. காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். 2021ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது.  காவல்துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண் போல் நின்று தான் சாத்தியமானது.  இதயத்தில் எந்த கெடுதலும் இன்று நமது திறமையாலும் அறிவினாலும் போரிடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

police

இதனிடையே டிசம்பர் 31ஆம் தேதி இரவு மற்றும் புத்தாண்டு தினத்தில் ஒரு சில சாலை விபத்துக்கள், ஓரிரு சச்சரவுகள் தவிர தமிழகமெங்கும் புத்தாண்டு தின கொண்டாட்டம் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் நடந்து முடிந்தது.   காவல்துறை வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.