#BREAKING ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு - கணக்கு விவரங்களை தர மறுப்பு!!

 
tn

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு நடத்த தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

tn

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டு நாள் ஆய்வை அறநிலைத்துறை விசாரணை குழு இன்று காலை தொடங்கியது.  கோயில் நிர்வாகத்தின் வரவு செலவு உள்ளிட்ட உள்ளிட்டவை பற்றி ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு இன்று கணக்கு கேட்க கோயிலுக்குள் சென்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் 10 காவலர்கள் கோவிலுக்குள் சென்று விசாரணையை தொடங்கினர்.

tn

கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழு ஆய்வு கோயிலில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக கணக்கு விவரங்களை தர தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.  கோயிலில் ஆய்வு நடத்த சட்ட ரீதியாக அணுக வில்லை என தீட்சதர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோயிலில் 2009 இல் நடந்த கணக்குத் தணிக்கைகே இன்னும் அறிக்கை தரவில்லை என தீட்சிதர்கள் கூறியுள்ளனர்.தீட்சிதர்கள்  கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலைத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.