விரைவில் இந்தியா சீனா இடையிலான நேரடி விமான சேவை..!!

 
Q Q

கடந்த 2020ல் இந்தியா சீனா இடையே நேரடி விமான சேவை கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. மேலும், லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உண்டானது.இதனால், மற்ற நாடுகளில் இருந்து சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து துவக்கப்பட்டாலும், இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து துவக்கப்படவில்லை.

இதன் பிறகு இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி சீனா சென்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.இதனைத் தொடர்ந்து நேரடி விமானப் போக்குவரத்தை துவக்குவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதில் ஏற்பட்ட முடிவைத் தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதியில் நேரடி விமான சேவையை துவக்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் குறிப்பிட்ட நகரங்கள் இடையே நேரடி விமான சேவையை துவக்க முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.