எனது ஆசிரியர் ரா.சங்கரன் சாரின் மறைவு வேதனை அளிக்கிறது - இயக்குநர் பாரதிராஜா இரங்கல்
நடிகரும், பழம்பெரும் இயக்குநருமான ரா.சங்கரன் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்
நடிகரும், பழம்பெரும் இயக்குநருமான ரா.சங்கரன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92. தமிழில் மௌன ராகம், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, அழகர் சாமி, உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் ரா.சங்கரன். இதேபோல் தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை, தேன் சிந்துதே வானம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் பாரதி ராஜா இவரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில், இயக்குநர் ரா.சங்கரன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எனது ஆசிரியர்
— Bharathiraja (@offBharathiraja) December 14, 2023
இயக்குனர் திரு.ரா.சங்கரன்
சார் அவர்களின் மறைவு
வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/SJmO0dApeq
இந்த நிலையில், நடிகரும், பழம்பெரும் இயக்குநருமான ரா.சங்கரன் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாரதிராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.