காவி நிறமாக மாறிய குடிநீர்... கிராம மக்கள் வேதனை

 
குடிநீர் குடிநீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு ஊராட்சியில்  ஏழை, எளிய விவசாய கூலி தொழிலாளர்களான நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்‌. இந்த கிராமத்தில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாது நிலை உள்ளது. அதன் காரணமாக ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலமாக அப்பகுதியில்  தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியானது எவ்வித பராமரிப்பு செய்யமால் தொடர்ந்து பல ஆண்டுகளாக தண்ணீர் தொட்டி சுத்தப்படுத்த படாமல் இருந்து வருகிறது. மேலும் நீர்தேக்க தொட்டியில் இருக்கும் தண்ணீர் காவி தன்மை கொண்டதால் அந்த காவிகள் நீர்தேக்க தொட்டியில் பல ஆண்டுகளாக தோங்கி சுத்தம் செய்யாத நிலையில்  அதன் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிதண்ணீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்து வருகிறது.

சேறு போல தட தடவென அடர்த்தியாக சிவப்பாக வருகிறது. இதனால் தண்ணீர் தேடி பெண்கள் தலையிலும், சிறுவர்கள் சைக்கிளில் குடங்களை கட்டி கொண்டு அடுத்த கிராமத்திற்கு தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றனர். மழை காலத்தில் மக்கள் தண்ணீர் எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் குடும்பங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடிப்பதிலேயே நேரம் கடந்து கால தாமதமாக படிக்க செல்ல வேண்டி உள்ளதாகவும் வேதனை படுகின்றனர்.

மேலும் இந்த கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் நல்ல குடிநீர் வழங்க பல முறை ஊராட்சி நிர்வாகம், உள்ளிட்ட பல துறை அதிகாரிகளிடம் மனு அளித்து இதுவரை நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தண்ணீர் பஞ்சம் அதிகளவில் நிலவுவதால் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறது.