மாற்றுத்திறனாளிகளை அவமதிக்க கூடாது - மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்

 
tn

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்க கூடாது என மாற்றுத்திறனாளிகள் ஆணையர் ,அனைத்து மாவட்ட அலுவலருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

TNGOVT

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மறுசீரமைப்பட்டு அதன் முதற் கூட்டம் 10.10.2022 அன்று மாலை 3.00 மணி அளவில்  சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர்  தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் நடைபெற்றது.

tn

இக்கூட்டத்தில் வாரிய உறுப்பினர்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களில் பல்வேறு அலுவல் காரணமாக வரும்பொழுது அவர்களை அவமதிக்கும் விதமாக எந்த செயலையும் செய்தால் உரிய அலுவலர் மற்றும் பணியாளர் மீது மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் பிரிவு 92 உட்பிரிவு(எ)ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.அதன்படி அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் விதமாக நடந்துகொள்ள கூடாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.