முதல் முறை கொடி ஏற்றிய பிரேமலதா...பாதியில் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

 
tn

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் முதல் முறையாக ஏற்றிய தேமுதிக கொடி பாதியில் அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகளை இன்று முதல் (ஜன.28) முழு கம்பத்தில் பறக்கவிட  வேனும் அன அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  கட்சியினருக்கு உத்தரவிட்டுருந்தார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மீண்டும் இன்று முதல் தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழக  நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரேமலதா குறிப்பிட்டு இருந்தார். 


அதன்படி இன்று பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கொடியை முழு கம்பத்தில் ஏற்றும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேமுதிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவர் கட்சி கொடியை ஏற்ற வைத்தார். இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் கொடியை ஏற்றுக்கொண்டிருந்த போது அந்த கொடி பாதி வழியில் அறுந்து விழுந்தது. இதனால் அங்கு நின்றுகொண்டிருந்த தொண்டர்கள் மத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொடியை மீண்டும் ஏற்றினார் பிரேமலதா விஜயகாந்த்.