தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் சுதீஷ் வேட்பு மனு தாக்கல்

 
தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் L.K. சுதீஷ் வேட்பு மனு தாக்கல்.

தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் L.K. சுதீஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Image

இதுதொடர்பாக L.K. சுதீஷ்னது எக்ஸ் தளத்தில், “தலைவர் கேப்டன் அவர்களின் ஆசியுடன், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் தாக்கல் செய்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கேப்டனின் ஆசீர்வாதத்துடன், தேமுதிகவில் அனைவரின் ஒத்துழைப்புடன் எல்.கே.சுதீஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இது நடந்திருக்க வேண்டியது. எதிர்பாராத விதமாக காலதாமதம் ஆகிவிட்டது. முதல் முறையாக இந்திய அளவில் ஜனநாயகக் கடமை ஆற்ற சுதீஷுக்கு கிடைத்துள்ள வாய்ப்புக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.