மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது திமுக!

 
tn

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

tn

மக்களவை தேர்தலில் தனது கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது திமுக.  எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தல் - 2024 நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் - மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (29.2.2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு. கழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 (இரண்டு) தொகுதிகளில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.