பாஜகவினர் வன்முறை - கோவை திமுக வேட்பாளர் கண்டனம்!!

 
tn

கோவையில் வன்முறையில் ஈடுபட்ட பாஜவினருக்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது, வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, பிரசாரம் செய்கின்றோம் என்ற பெயரில் ஊடுருவ வைத்திருக்கிறார்கள். கோவையில் எந்த நேரத்திலும் கலவரத்தை உண்டாக்கிவிடுவார்களோ என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது பள்ளி, கல்லூரி மாணவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். இதற்கான ஆதாரம் இருக்கின்றது. 

tn

பாஜகவினரின் விதிமீறல்கள் குறித்த புகார்களை தேர்தல் ஆணையம் கவனிக்கிறதா என்று சந்தேகம் எழுந்திருக்கின்றன.  தோல்வி பயத்தினால் வேறு ஏதேனும் இடையூறு செய்ய திட்டமிட்டுள்ளார்களா என்று கேள்வி எழுந்திருக்கிறது. கோவை அமைதி விரும்பும் நகரம். சத்தமாக பேசினால்கூட மக்களுக்கு பிடிக்காது. ரவுடிசம் இங்கு எடுபடாது  என்றார்.