ராணுவ வீரரை கொன்ற திமுக கவுன்சிலர் பிடிபட்டார்
ராணுவ வீரர் பிரபு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பட்டி அடுத்த வேலம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரது தம்பி பிரபு. இருவருமே ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்கள். ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த நேரத்தில் கடந்த 8.2. 2023 அன்று காலையில் பிரபாகரன் அவரது வீட்டில் அருகே உள்ள நீர்த்தேக்க தொட்டியில் துணி துவைத்து இருக்கிறார்.
அப்போது அந்த வழியாக சுமந்த நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு திமுக கவுன்சிலர் சின்னச்சாமி, குடிநீர் கிடைக்கும் இடத்தில் இப்படி துணி துவைப்பது சரியா? என்று ஆத்திரமாக கேட்டிருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது பிரபாகரன் மீதான ஆத்திரத்தில் அங்கிருந்து சென்று விட்டார் சின்னச்சாமி. ஆனால் அன்று மாலையில் உறவினர்கள் , ஆதரவாளர்கள் 10 பேரை திரட்டி கொண்டு பிரபாகரன் வீட்டிற்கு வந்து பிரபாகரனையும் அவரது தம்பி பிரபுவையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.
இதில் பலத்த காயம் அடைந்த பிரபு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சசிகிச்சை பெற்று வந்தார் . இன்று அவர் சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்து உள்ளார். இதை எடுத்து பிரபு போலீசில் அளித்து வாக்குமூலத்தின் அடிப்படையில் நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திமுக கவுன்சிலரின் மகன்கள் ராஜபாண்டி , சென்னையில் போலீசாக இருக்கும் சூரிய குரு ,சூரியமூர்த்தி மற்றும் அவர்களின் உறவினர்கள் வேடியப்பன் , மணிகண்டன் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அடிதடி என்று முதலில் வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் பிரபு உயிரிழந்ததை எடுத்து கொலை வழக்காக மாற்றி நாகரசம்பட்டி போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ததோடு அல்லாமல் தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்ளிட்டோரை பிடிக்க தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சின்னச்சாமி, கவுன்சிலரின் மகன்கள் ராஜபாண்டி, சூரியமூர்த்தி, குணாநிதி, புலி பாண்டி மற்றும் கவுன்சிலரின் உறவினர்கள் மணிகண்டன் ,சின்னச்சாமி ,காளியப்பன் , வேடியப்பன் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.