மே 3ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்- துரைமுருகன்
Apr 28, 2025, 19:33 IST1745848991959
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 3ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 03-05-2025 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


