திமுக - மதிமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்

 
dmk

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் மதிமுகவின் குழு பேச்சுவார்த்தை தொடங்கியது. 


நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குழு அமைத்துள்ளது. ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர்,  மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர், ஆவடி இரா.அந்திரிதாஸ், அரசியல் ஆய்வு மைய செயலாளர், வி.சேஷன், தேர்தல் பணிச் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் மதிமுகவின் குழு பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த முறை ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவைத் தொகுதி மதிமுகவிற்கு வழங்கப்பட்டன. இம்முறை 6 விருப்பத் தொகுதிகளின் பட்டியலை மதிமுக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் 6 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் அளித்து 2 தொகுதிகளை கேட்க மதிமுக திட்டமிட்டுள்ளது. அதாவது விருதுநகர், திருச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகியவை மதிமுகவின் விருப்பத் தொகுதிகள் ஆகும்.  6 தொகுதிகளில் இரண்டு இடங்களை வழங்கும்படி திமுகவிடம் வலியுறுத்த மதிமுக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் இந்தமுறை பம்பரம் சின்னத்தில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.