“ஒரே ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்”- அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி

 
“ஒரே ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்”- அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி “ஒரே ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்”- அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி

ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தான் தேர்தல் காலம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி மறைமுகமாக விமர்சனம் செய்தார். 

செந்தில் பாலாஜி

ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் நகர திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். 
 
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “ பள்ளப்பட்டி மக்கள் அன்போடு பிரியாணி கொடுத்தால் அது திருமண விழா, அதேபோல் நோன்பு கஞ்சி மற்றும் வடையும் கொடுத்தால் அது ரமலான் திருநாள், ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குருபானி கொடுத்தால் அது பக்ரீத் காலம். அதுவே ஒரே ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம். எனவே ஒரு ஆடு அல்ல எத்தனை ஆடு வந்தாலும் பள்ளப்பட்டியில் உள்ளேயும் வர முடியாது, உள்ளே வந்துவிட்டு வெளியே செல்லவும் முடியாது. எங்கு நின்றாலும் அவர்கள் முட்டை தான் வாங்க வேண்டும், இனி தேர்தல் களம் பற்றி அவர்கள் சிந்திக்கவே கூடாது. அண்ணாமலை ஒரு கோமாளி” என்றார்.